புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், 256 உதவியாளர் பணிக்கு, 32 ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிக்கான முதல்நிலை தேர்வு, கடந்த 27 ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய 84 மையங்களில் நடந்தது. அதில் ஆண், பெண், என மொத்தம் 22 ஆயிரத்து 860 பேர் எழுதினர். தேர்வு எழுதிய 22,860 பேரில் 10,766 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வினை எழுத உள்ளனர். இரண்டாம் நிலை தேர்வு ஜூன் மாதம் 15ம் தேதி நடக்கும் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உதவியாளர் (Assistant) பணிக்கு எழுத்துத் தேர்வின் இரண்டாம் நிலை (Tier-II) தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 15.06.2025 (ஞாயிறு) அன்று நடைபெற இருந்த Tier-II எழுத்துத் தேர்வு, 22.06.2025 (ஞாயிறு காலை) அன்று புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் என்றும், ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யும் தேதி மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், மேலும் விவரங்களுக்கு தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.