தனது மசாலா பொரியால் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மயக்கிய பட்டதாரி இளைஞர்! நெகிழ்ச்சியூட்டும் வீடியோ…

புதுச்சேரி நேரு வீதியில் தள்ளுவண்டியில் மசாலா பொரி மற்றும் வேர்க்கடலை விற்பனை செய்து வரும் ஒரு பட்டதாரி இளைஞரின் முயற்சியை பாராட்டிய முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்கள் தற்போது பலரது மனங்களை நெகிழச் செய்துள்ளன.

திருவண்ணாமலைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி பட்டதாரி. தொழிலில் தன்னம்பிக்கையுடன், புதுச்சேரி நேரு வீதியில் தள்ளுவண்டி மூலம் மசாலா பொரி மற்றும் வேர்க்கடலை விற்பனை செய்து வருகிறார்.

இவரைப் தொடர்ந்து கவனித்து வந்த முதலமைச்சர் ரங்கசாமி, ஒருநாள் தனது உதவியாளரிடம், அந்த வாலிபரிடமிருந்து மசாலா பொரி மற்றும் வேர்க்கடலை வாங்கச் சொல்கிறார். இதை அறிந்த லட்சுமி நாராயணன், நேரில் முதல்வரை சந்தித்து, அவரது கைகளில் நேரடியாக பொரி வழங்குகிறார்.


அந்த நேரத்தில், “தினமும் எப்படி வேலை செய்கிறாய்?” என ஜாலியாக பேசும் முதலமைச்சரிடம், “3 கிலோ விற்பனை செய்தால் ₹500 கிடைக்கும்” என அந்த வாலிபர் பதிலளிக்கிறார். பொரியை ருசி பார்த்த முதல்வர், “நல்லாயிருக்கே!” என பாராட்ட, நெகிழ்ந்த அந்த இளைஞர், முதல்வரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று செல்கிறார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பலரது மனங்களில் நம்பிக்கையும் ஊக்கத்தையும் ஊட்டியுள்ளது.