முன்னணி திரைப்பட நடிகைகளான தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோ கரண்சி நிறுவனம் ஆரம்பித்து புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூபாய் 60 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுப்பட்ட இரண்டு வாலிபர்களை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலி கிரிப்டோ கரண்சி நிறுவனத்திற்க்கு விளம்பரம் செய்த நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடமும் விசாரணை நடத்தி, அவர்கள் ஊதியமாக பெற்ற தலா ரூ. 25 லட்சம் வாங்கியதை அவர்களிடமிருந்து திரும்பப்பெற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (66). முன்னாள் இராணுவ வீரரான இவர், ஓய்வு பெற்ற பின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவர் தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரண்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தில் அஷ்பே என்கிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை உண்மை என்று நம்பிய அவர் அந்த லிங்கை பின்பற்றியதன்பேரில், மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்புகொண்டு கிரிப்டோ கரன்சி முதலீடு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து அசோகன் முதல் தவனையாக ரூ. 10 லட்சம் முதலீடு செய்து கோவையில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் துவக்க விழாவிற்க்கு சென்றார். அங்கு நடிகை தமன்னா உள்ளிட்ட சில திரை நட்சத்திரங்கள் விழாவை சிறப்பிததை பார்த்த அசோகன் மகிழ்ச்சியில் தான் பேசிய அதே நபரிடம் தொடர்பு கொண்டு, கிரிப்டோ முதலீடில் ஈடுப்பட்டார். அப்போது அசோகன் அவரது நண்பர்களான புதுச்சேரியை சேர்ந்த 10 பேரையும் கிரிப்டோ கரண்சி மூதலீட்டில் ஈடுப்படுத்தினார்.
இதனையடுத்து மூன்று மாதங்களுக்கு பிறகு சென்னை மகாபலிபுரம் பகுதியில் நடைபெற்ற கிரிப்டோ கரண்சி நிகழ்ச்சிக்கு அசோகன் அழைக்கப்பட்டார். அப்போது அங்கு நடிகை காஜல் அகர்வால் விருந்தினராக பங்கேற்ற நிகழ்ச்சியில் பல கிரிப்டோ கரண்சி முதலீட்டாளர்களுக்கு கார்கள் பரிசாக வழங்க. இதனை பார்த்த அசோகன் தனக்கு காருக்கு பதிலாக பணம் வேண்டுமென ரூ. 8 லட்சம் பணமாக பெற்று கொண்டார். இதனை தொடர்ந்து அசோகன் மற்றும் அவரது நண்பர்கள் ரூ 2.50 லட்சம் வரை பல்வேறு தவணைகளாக அஷ்பே நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளனர். அதன் பின்னர் அசோகன் கணக்கில் ரூ.9 கோடி இருப்பது தெரியவந்தது.
இதனை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னுடன் பேசி வந்த எண்ணை தொடர்புகொள்ள முயற்சி செய்த போது, எதிர்முனையில் போஃனை எடுக்கவில்லை. எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் கோயம்புத்தூர் விரைந்து சென்று நித்தீஷ் ஜெயின் (36), அரவிந்த் குமார் (40) ஆகிய 2 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்து, பின்னர் இருவரையும் புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் கோயம்புத்தூரை சேர்ந்த தாமோதரன், நூர்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா உள்பட சென்னை, பெங்களூரு பகுதியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலை வைத்து விளம்பரம் செய்து புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலரிடம் 60 கோடி வரை மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலுக்கு தலா 25 லட்ச ரூபாய் ஊதியமாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களிடமும் விசாரணை நடத்தி, அந்த பணத்தை அவர்களிடம் இருந்து திரும்ப பெற சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கூடுதலாக எவ்வளவு பணம் நடிகைக்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது என தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.