புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவ சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பாரதப் பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் மீனவப் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் மத்திய மீன் வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
பிரதம மந்திரியிம் மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதா விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி,மீனவர் சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும்மீனவ சமூதாய மக்கள் புதுச்சேரியில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த அவர், மீனவ மக்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக செய்து கொடுத்து வருகிறது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்பது போல மீனவ சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றிக்கொடுக்கும் என உறுதி அளித்த அவர், அதனை செயல்படுத்துவதற்கான பணிகளை அரசு தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் உள்ள மீனவ கிராமமான
காலப்பட்டில் தொடங்கி மூர்த்திகுப்பம் வரை கடல் அரிப்பு உள்ள நிலையில் கடல் அரிப்பை தடுக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது என்றார்.