வரும் மே 12-ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் OPD இயங்காது.! நோயாளிகள் கவனத்திற்கு…

வரும் மே 12 (திங்கள்), புத்த பூர்ணிமா தினமாகும். மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) அன்று செயல்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு வருவது வழக்கம். எனவே, அன்று நோயாளிகள் மருத்துவமனைக்குச் வர வேண்டாம் எனவும், தேவையற்ற குழப்பத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளையில், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்றும், அவசர தேவையுள்ளவர்கள் அந்த சேவையை பயன்படுத்தலாம் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.