புதுச்சேரியில் கொடூரம்: திருமணத்துக்கு மறுத்த சிறுமி பலாத்காரம் – வாலிபர் கைது

புதுச்சேரி அருகில் நெட்டப்பாக்கம் கரியமாணிக்கம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (20), பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்து வருகிறார். இவர் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

மேலும் அந்த சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சரண்ராஜ் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு அந்த சிறுமி மறுக்கவே நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்‌ அளித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் காவல்நிலைய போலீசார் சரண்ராஜ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது