புதுச்சேரியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற 3-தங்க கருட சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ தென்கலை ஶ்ரீநிவாச பெருமாள் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா நடைபெற்று வரும் நிலையில் நாள்தோறும் பெருமாள் பல்வேறு வாகன சேவையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் நிலையில் இரவு 3-தங்க கருட சேவை நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு ஷோடச நிவாரணதனிகள் கட்டப்பட்டு உட்புறப்பாடு நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.