புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாடதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியிக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசியர்களுடன் கலந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்றார். இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே நேற்று மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்ற மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. ஆனால் இன்று மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கபடவில்லை. நிகழ்ச்சி தொடங்கியதும் தேசிய கீதம் மட்டுமே இசைக்கபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.