வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வக்பு வாரிய திருத்த மசோதா நகலை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். வக்பு திருத்த மசோதா 2025 இப்போது சட்டமாக மாறியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தை எதிர்த்து எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடியதாக உள்ளதாகவும், எனவே அந்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர்
அக்கட்சியின் புதுச்சேரி மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் தலைமையில் சுதேசி மில் அருகில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வக்ஃபு வாரிய திருத்த மசோதா நகலை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.