புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை திருக்கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருநீர், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்ட கலச நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன பட்டுடித்தி, எலுமிச்சை பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது.
தொடர்ந்து சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.