புதுச்சேரி ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசை சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.!!

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை, ஸ்ரீ யோக மாயா லலிதாம்பிகை ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகை திருக்கோவில். இந்த திருக்கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ லலிதா மஹாயாகம் நடைபெற்றது. தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதாம்பிகை மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு பால், தயிர், சந்தனம்,திருநீர், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்ட கலச நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பச்சை பட்டுத்தி, எலுமிச்சை பழங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சோடச தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து ஶ்ரீ மஹா சாம்ராஜ்ய லலிதா மற்றும் ஶ்ரீ யோக மாயா லலிதாம்பிகைக்கு சகஸ்ரநாமம் பாடப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி மகேஸ்வர சாஸ்திரிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.