திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தரிசனம் செய்த ஆளுநர் தமிழிசை

சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாடு செய்தார்.

தர்மபுர தலைமை ஆதீனம், தலைமைச் செயலர் திரு ராஜீவ் வர்மா, துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், காவல்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.