புதுச்சேரியில் வரும் 20 ந்தேதி நவோதயா வித்யாலயா பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய பிப்ரவரி 3 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.