மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை (24.02.2024) பள்ளிகளுக்கு விடுமுறை

இதுகுறித்து புதுச்சேரி அரசின் பள்ளிகல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாசி மகத்தை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (24.02.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகவும், சிபிஎஸ்இ தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிடப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.