தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) விடுமுறை – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரண்டாவது நாளாக நேற்று இரவு முதல் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் புதுச்சேரியில் இன்று (08.01.2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.