புதுச்சேரியில் நடைபெற்ற “சேவை தொண்டு நிகழ்ச்சி 2025” – 450க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்!

புதுச்சேரியை சேர்ந்த லக்கி ஜெனரல்ஸ் –
எஸ்.ஜி. கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜெனரல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து “சேவை தொண்டு நிகழ்ச்சி 2025” என்ற தலைப்பில் புதுச்சேரியில் சமூக நல மற்றும் மருத்துவ சேவை முகாமை நடத்தினர். இந்த நிகழ்ச்சி 45 அடி சாலையில் உள்ள பிரின்ஸ் ஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, கல்வித்துறை பிரதிநிதி கலைமாமணி இளமுருகன், பங்கூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் 450க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கான நலவிழிப்புணர்வு, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் 100 ஏழை குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும், 100 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மருத்துவ சேவைகள்:

இவச மருத்துவ முகாம்: சுமார் 200 நபர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவ ஒத்துழைப்பு: மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசுத் துறை மருத்துவர்களின் நிபுணத்துவத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

நிறுவனர் உரை:
நிகழ்ச்சி முடிவில் நிறுவனர் தலைவர் திரு. பிராகரன் நன்றி உரையாற்றினார். சமூகத்தின் நலனிற்காக இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் நடைபெறும் என அவர் உறுதி தெரிவித்தார்.