புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: 600 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் 54 அணிகளை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கிராமப்புற மாணவர்களிடையே கூடைப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரி கூடைப்பந்து கழகத்துடன், இளம் இந்தியா அமைப்பு இணைந்து புதுச்சேரியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளை இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடத்தின. பிப்ரவரி 25 ம் தேதி முதல் 8 நாட்கள் சப்-ஜீனியர், ஜீனியர், சீனியர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் 54 அணிகளை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் ப்ளூ ஸ்டார் அணி முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் மேஜிக் அணியும் முதலிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

வெற்றிபெற்ற அணிகளுக்கு புதுச்சேரி கூடைப்பந்து கழக தலைவர் ரான்சன் தாமஸ் மற்றும் இளம் இந்தியா அமைப்பின் தலைவர் ரகுநந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் வெற்றிபெற்றுள்ள அணிகளின் வீரர்கள் அடுத்து தேசிய அளவில் நடைபெறும் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.