தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு.
வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளை மாலை ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார்.