தமிழ் புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இருவருக்கும் தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மணக்குள விநாயகர் பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல் வரதராஜப் பெருமாள் கோவில் புதுவை காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள், வேதபுரீஸ்வரர், காந்தி வீதியில் உள்ள சித்தி விநாயகர், மிஷன் வீதியில் உள்ள காளத்தீஸ்வரர், கவுசிக பாலசுப்ர மணியர், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர், பொன்னு மாரியம்மன், ஏழை மாரியம்மன், கணபதிநகர் ஷீரடி சாய்பாபா, பெரியாண்டவர், வசந்த்நகர் வேலாயுத ஈஸ்வரர், திருவள்ளுவர் நகர் கெங்கை அம்மன், துலுக்கானத்தம்மன், ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், தென்கலை வரதராஜப் பெருமாள், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், பிள்ளைச்சாவடியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், பெரிய காலாப்பட்டில் உள்ள பாலமுருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.