கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் முகாமிட்டு பாஜக நிர்வாகிகளை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்கும்.தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் கூட்டண. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடக்கிறது. டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும்.
ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப திமுக மும்மொழி கொள்கை குறித்து பேசி வருகிறது.மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் விவகாரத்தை திமுக பயன்படுத்துகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். தமிழ் மக்களை, தமிழகத்தை, தமிழ்மொழியை நாங்கள் கௌரவமாகக் கருதுகிறோம். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தினோம். தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம்.
தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்கிறது என்பதை மக்களிடம் பட்டியலிட முடியுமா?
பாஜக ஆளும் மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் பாடநூல்களை பிராந்திய மொழியில் படிக்கிறார்கள். தமிழில் பாடநூல்களை மாற்ற 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் அமித்ஷா.