புதுச்சேரியில் 3.3 ஏக்கரில் மேலும் ஒரு புதிய பஸ் ஸ்டேண்ட்.! டெண்டர் கோரியது அரசு…

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரயில்வே மேம்பாலம், பைபாஸ் சாலை, இணைப்பு சாலை என அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு தனியாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி கிழக்கு கடற்கரை சாலை நவீன மீன் அங்காடி அருகே புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட பணிக்கு 1 கோடியே 30 லட்சம் மதிப்பீல், உழவர்கரை நகராட்சி டெண்டர் கோரியுள்ளது. வரும் 8ம் தேதி டெண்டர் திறக்கப்படுகிறது. 3.3 ஏக்கரில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிலத்தை சமன்படுத்துவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.