காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 29 சுற்றுலா பயணிகள் பலியாகியுள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்தப்பட்ட காஷ்மீர் பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியேள்ளது.
மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும்
காவலர் கட்டுப்பாட்டு அறை பகுதியில் வைக்கப்பட்டுள்ள 29 பேரின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்துகிறார்.
இந்நிலையில் சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விமான நிலையத்திலேயே ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.
அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசரமாக நாடு திரும்புகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அரசு சார்ந்த முக்கிய ஆலோசனைகள் நடைபெறலாம் என்பதால் நாடு திரும்புகிறார்
இதனிடையே ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு
படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத
தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டை தீவிரம்.பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்
இடையே கடும் துப்பாக்கிச் சண்டை.
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு – ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.