உலக பொருளாதார சூழல் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறிவிட்டது. இது ஒருபுறம் இருக்க 2025 ஆம் ஆண்டு இறுதியில், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் ஒரு லட்சத்தை தாண்டிக் கூடும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதனை நிரூபிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை (மார்ச்-29) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,360-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 31) சென்னை மற்றும்
புதுச்சேரிரியில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,425-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.67,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய விலையேற்றத்தின் மூலம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.113-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,13,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.