புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி, 100 அடி சாலை/NH45A இல் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் R.E சுவரை மறுசீரமைப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள புதுச்சேரி பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, ரயில்வே மேம்பாலம், 100 அடி சாலை/NH45A இல் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பொதுமக்களின் வசதிக்காகவும் புதுச்சேரியில் கீழ்கண்ட முக்கிய சாலைகளில் 08.05.2025 வியாழக்கிழமை காலை முதல் பின்வரும் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:-
திண்டிவனம் ரோட்டில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு செல்லும் கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் கோரிமேடு ஜிப்மர் சந்திப்பில் இருந்து டிரக் டெர்மினல் ரோடு -மேட்டுப்பாளையம் சந்திப்பு – குண்டுசாலை – மூலகுளம் சந்திப்பு – வில்லியனூர் சந்திப்யை அடைந்து புறவழி சாலை வழியாக கடலூருக்கு செல்லவேண்டும்.
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் கன்னியகோயில் அல்லது தவளக்குப்பம் சந்திப்பில் திருப்பப்பட்டு, புறவழி சாலை வழியாக வில்லியனூர் சந்திப்பு மூலக்குளம் சந்திப்பு – குண்டுசாலை மேட்டுப்பாளையம் சந்திப்பு டிரக் டெர்மினல் ரோடு ஜிப்மர் சந்திப்பை அடைய வேண்டும்.
சென்னையில் இருந்து ECR வழியாக கடலூருக்கு செல்லும் அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் ராஜீவ் காந்தி சதுக்கம் அல்லது இந்திர காந்தி சதுக்கத்தில் வலதுபுறம் திருப்பப்பட்டு புறவழி சாலை வழியாக கடலூருக்கு செல்லவேண்டும்.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர் நோக்கி வரும் அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் வில்லியனூர்/வடமங்கலம் சந்திப்பில் கடலூர் பைபாஸ் நோக்கி திருப்பி விடப்படும்
இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து மரப்பாலம் சந்திப்பு நோக்கி வரும் பேருந்துகள் உட்பட அனைத்து கனரக மற்றும் நடுத்தர வாகனங்கள் இந்திரா காந்தி சதுக்கத்தில் நெல்லித்தோப்பு சந்திப்பு நோக்கி திருப்பி விடப்பட்டு, புவன்கரே வீதி சந்திப்பு நெல்லித்தோப்பு சந்திப்பு CV Road சந்திப்பை அடைந்து கடலூர் சாலை வழியாக மரப்பாலம் சந்திப்பை அடையவேண்டும். இது CV Road சந்திப்புக்கும் AFT Mill ரோடுக்கும் இடையில் கடலூர் சாலை மூடப்படும் வரை அமலில் இருக்கும்.
CV Road சந்திப்புக்கும் AFT Mill ரோடுக்கும் இடையில் கடலூர் சாலை மூடப்பட்ட பிறகு, இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து மரப்பாலம் நோக்கி செல்லும் பேருந்துகள் உட்பட அனைத்து களாக மற்றும் நடுத்தர வாகனங்கள் இந்திரா காந்தி சதுக்கத்தில் புவன்கரே வீதி சந்திப்பில் வலதுபுறம் திருப்பி விடப்பட்டு புவன்கரே வீதி வழியாக சென்று மரப்பாலம் சந்திப்பை அடையவேண்டும்.
அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டும், வழக்கம் போல் 100 அடி சாலை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வர அனுமதிக்கப்படும்.
100 அடி ரோடு, ரயில்வே மேம்பாலச் சாலையின் ஒருபகுதி சாலையை மட்டும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மரப்பாலத்திலிருந்து இந்திரா காந்தி சதுக்கம் வரை வழக்கம் போல் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து மரப்பாலம் வரை இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.
முதலியார்பேட்டை, 100 அடி சாலை, ரயில்வே மேம்பாலத்தில் ரெட்ரோ பொருத்தும் பழுதுபார்க்கும் பணிகள் முடியும் வரை இந்தப் போக்குவரத்து ஒழுங்குமுறை மாற்றம் அமலில் இருக்கும்.
எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மேற்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளை கடைப்பிடித்து புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.