புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் இன்று அதிகாலை திடீரென மின்மாற்றி அதிக சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு கொசப்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை மின்மாற்றி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. மின்மாற்றியில் உள்ள ஆயில் வெளியேறியதால் மின் மாற்றி தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தொடர்ந்து மின்சாரம் கொடுப்பதற்கான பணிகளை மின்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.