புதுச்சேரியில் 14 வயது சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் வடமாநில சமையல்காரர் கைது: மேலும் ஆறு பேருக்கு வலை.!

புதுச்சேரியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை காதலித்து ஏமாற்றி நண்பர்களுடன் கூட்டு‌ பாலியல் பலாத்தகாரம் செய்யப்பட்ட செய்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய உத்திரபிரதேசத்தைச் சார்ந்த சமையல் தொழிலாளியை போக்சோவில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி, 8 ம் வகுப்பு வரை படித்துவிட்டு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்நிலையில் கடந்த 2 ம் தேதி சிறுமி மற்றும் அவருடைய தோழி ஆகியோர் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு சிறுமிகளும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உடனே முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில், போலீசார் அவர்களை விரைந்து கண்டுபிடித்தனர். மேலும்
சிறுமிகள் இருவரும் சோர்வாக இருந்ததால், போலீசார் அவர்களை அழைத்து விசாரித்ததில். குருசுக்குப்பம் மரவாடி தெருவை சேர்ந்த மீன் வியாபாரி புஷ்பராஜ் (25), வைத்திக்குப்பம் ஏ.சி., மெக்கானிக் மணிமாறன் (27) ஆகியோர் சிறுமிகளை காதலித்து ஏமாற்றியும், அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி கொடுத்து, கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது நண்பர்களையும் அழைத்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட வைத்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2 சிறுமிகளையும் 10க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்ததையடுத்து, சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று விடுதியில் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில் காதலிப்பதாக கூறி பலாத்காரத்தில் ஈடுபட்ட புஷ்பராஜ், மணி ஆகியோரை கைது செய்த முத்தியால்பேட்டை போலீசார் இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இரு தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை கைது செய்த போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த வினோத் (44). இவர் புதுச்சேரியில் தங்கி சமையல் வேலை செய்து வருகிறார். இவரும் சிறுமிகளுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.