கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா உள்ளிட்டோரின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் உருளையன்பேட்டை தொகுதி திமுக சார்பில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் ஏற்பாட்டில் அண்ணா சாலை போத்தீஸ் அருகில் இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கலந்துகொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி, நுங்கு, கரும்பு சாறு, வெள்ளரிப்பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ., மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், மாறன், வேலவன், பிரபாகரன்,தொகுதி செயலாளர் சக்திவேல்,தியாகராஜன், அவைத் தலைவர் ஆதிநாராயணன், துணைச் செயலாளர் முருகன், கண்ணதாசன் பொருளாளர் சசிகுமார், தொகுதி பிரதிநிதி பொன்னுசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் இராமச்சந்திரன். நெல்சன் அணிகளின் நிர்வாகிகள் மதிமாறன், குரு, ரெமி எட்வின், தாமரை கண்ணன், தெய்வேந்திரன், ஸ்டீபன் ராஜ், மதனா, சேட்டு என்கிற வேல்முருகன், அன்பழகன், ராஜேஷ், ஸ்ரீதர், தர்மராஜ், ஆளவந்தார், அர்ஜுன் ரங்கராஜ், ஐசக் நேசமணி, முகமது இஸ்மாயில், ஜெயபிரகாஷ், எஸ்.எம்.எஸ். ஸ்ரீதர், அஜி பாஷா, வெங்கடேசன், யோகேஷ், பாலசண்முகம், சிவதாஸ், கிளை செயலாளர்கள் கருணாகரன், முத்துசாமி, கிரி, புருஷோத், அன்பு, சண்முகசுந்தரம், ராஜா, சாலமன், விஜயகுமார், சுப்பு, அந்தோணி, முருகன், சத்தியமூர்த்தி, இளையநம்பி, ரவி, வீரப்பன். கழக நிர்வாகிகள் சொல்தா ரவி, சாலமன், சரவணன், பாக்யராஜ், ராஜவேல், பாக்யராஜ், விமல், ஜெய், விக்கி, பன்னிர், பாலா, ஆனந்த், தமிழ் செல்வன், அப்பர், பெரோஸ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.